tamilnadu

img

தீ விபத்தில் கார் எரிந்து சேதம்

 கோவை, ஜூலை 18- நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கோவை - அவினாசி சாலையில் உள்ள நீலாம்பூர் சுங் கச்சாவடி அருகே வியாழனன்று கோவையை நோக்கி வந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக காரின் முன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ காரின் பிற பகுதிக்கும் மளமளவெனப் பரவி யது. இதனால், கார் முற்றிலும் எரிந்து சேதமானது.  இதனிடையே, அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீய ணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இச்சம்பவம்  காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.