tamilnadu

img

கத்தி, அருவாளில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் 

 கோவை, ஆக.31- கோவை சரவணம்பட்டி பகுதியில் கத்தி, அரிவாளுடன் ரவுடிகள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ரவுடிகள் கத்தி, அருவாள் போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதேபோல், கோவையிலும் அரி வாளால் கேக் வெட்டி ரவுடிகள் பிறந்தநாள் கொண்டா டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப் படங்கள் சமூக வலையதளங்களில் பரவி வருவது கோவை மாநகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள சிவானந்த புரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் மீது காவல் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் இருப் பதாகவும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் குறித்து தற்போது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

;