tamilnadu

img

தூர்ந்த வாய்க்காலால் அவதி : களமிறங்கிய கிராம மக்கள்

சீர்காழி, டிச.20- சீர்காழி அருகே எருக்கூரில் வடி கால் வாய்க்கால் தூர்ந்த நிலையில் மூடப்பட்டு கிடந்ததால் தேங்கிய மழை நீரை பள்ளம் தோண்டி கிராம மக்கள் வடிய வைத்தனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் செபாஸ்டியார் தெரு வில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடியிருப்பு வீடு களைச் சுற்றியும், பெய்த மழையின் போதும், தண்ணீர் தேங்கியது. அப்பகுதியில் உள்ள சின்னவடிகால் வாய்க்கால் மூடப்பட்டிருந்தால், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தேங்கிய மழை நீர் வடிவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் எருக்கூர் கிராம மக்கள் சார்பில் சாலையின் குறுக்கே தற்காலிக பள்ளம் தோண்டி தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தோண்டிய பள்ளத்தில் நிரந்தரமாக தண்ணீர் வெளியேறும் வகையில் குழாய் பதிக்கும் முயற்சி யிலும் ஈடுபட்டனர்.