tamilnadu

img

குண்டும், குழியுமான சாலைகளை சீரமைத்திடுக

கோவை மாநகராட்சி ஆணையரிடம் வாலிபர் சங்கம் மனு

கோவை, நவ.20- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் புதனன்று மாந கராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.  இததொடர்பாக கோவை மாநக ராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராம சாமியிடம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் மற்றும் விவேகானந்தன், மணிபாரதி, நிசார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித் திருப்பதாவது, கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிக ளுக்காக தோண்டப்படும் சாலைகள் திட்டப்பணிகள் முடிவுற்றும் சீரமைக் கப்படுவதில்லை. இதன்காரணமாக குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் மழைக்காலத்தில் நடக்கவே முடியாத நிலை உள்ளது. பல் வேறு விபத்துகளும் ஏற்படுகிறது. ஆகவே உடனடியாக சேதமடைந்துள்ள சாலை களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது.  முன்னதாக, கோவை மாநகரப் பகுதி யில் எந்தெந்த சாலைகள் மிக மோசமாக உள்ளது என்கிற நீண்ட பட்டியலை வாலிபர் சங்க நிர்வாகிகள் அளித்தனர்.