tamilnadu

img

மத்திய அரசின் தொழிலாளர்கள், விவசாய விரோதப் போக்கு சிஐடியு, விவசாய, விவசாய தொழிலாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, செப். 6- மத்திய அரசின் விவசாயிகள், தொழிலாளர் விரோத நடவடிக் கைகளைக் கண்டித்து அவிநாசி, தாராபுரத்தில் வெள்ளியன்று கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தொழிலாளர் நலச்சட்ட திருத் தங்களை வாபஸ் பெற வேண்டும். எட்டு மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச மாதம் ஊதியம் ரூ.18ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமலாக்கி கட்டுப்படியான விலை நிர்ணயித்து விவசா யத்தை பாதுகாக்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாட்கள் ஆக உயர்த்தி, நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் ஊதி யம் வழங்க வேண்டும். அனைவ ருக்கும் கல்வி, சுகாதாரம், மருத் துவம், வீட்டுவசதி கிடைக்க நட வடிக்கை எடுக்கக் வேண்டும் என வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயி கள் தொழிலாளர் சங்கம் அமைப் புகளின் சார்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே வெள் ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்டிட கட்டுமான சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ராஜன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், ஒன்றிய தலைவர் எஸ்.நல்லப் பன், ஒன்றிய செயலாளர் ஏ.சண் முகம்,விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.முத்துச்சாமி, மாவட்டத் துணை செயலாளர் ஆர்.பழனிச்சாமி, மாநிலக்குழு உறுப்பினர் கே.முரு கன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜே.ரமேஷ்,  பொது தொழி லாளர் சங்கத்தின் ஒன்றிய துணைத்தலைவர் ஆர்.வேலுச் சாமி  , தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றிய தலைவர் ஏ. முத்துரத்தினம்   ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று மத்திய அரசின் விவசாய, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப் பினர். 

தாராபுரம்

தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவிந்தராஜ் தலைமை வகித் தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.சுப்பிரமணியம், தாலுகா செயலாளர் என்.கனகராஜ், சுப்பிரமணியன், பி.பொன்னுச் சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.