மே.பாளையம், ஜூலை 21- வாழை தோட்டத்தினுள் நுழைந்த யானைக்கூட்டத்தால், ஒரே இரவில் ஓராண்டு உழைப்பு வீணானது என மேட்டுப்பாளையம் விவசாயிகிள் வேதனையடைந்துள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் உள்ள தாசம்பாளையம் என்னும் கிராமத்தினுள் நேற்றிரவு புகுந்த காட்டு யானைக்கூட்டம் ஒன்று ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் பதினைந் திற்கும் மேற்பட்ட தென்னை மரங் களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத் தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் என்றாலும், அவை மலைக் காடுகளை விட்டு வெளியேறி ஊருக் குள் புகும் சம்பவம் அரிதாகவே காணப் பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டு களாக யானைகளின் ஊடுருவல் படிப்படியாக அதிகரித்து, தற்போது யானைக்கூட்டங்கள் கிராமங்களுக் குள் புகுந்து விவசாய பயிர்களை அழித்து சேதப்படுத்தும் சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகி வருகிறது. தோட்டங்களுக்குள் யானைகள் புகுவதைத் தடுக்க விவசாயிகள் தனிப்பட்ட முறையில் சோலார் மின் வேலி அமைப்பது, தொங்கும் கம்பி வேலி அமைப்பது, இரவு நேர காவல் இருப்பது என பல்வேறு முயற்சிகளை சொந்த செலவில் செய்தாலும், பயிர் களை யானைகளிடம் இருந்து காக்க இயலவில்லை. இந்நிலையில், நேற் றிரவு நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி தாசாம்பாளையம் என்னும் கிராமத்தினுள் நுழைந்த யானைக்கூட்டமொன்று சுப்பையன் என்பவருக்குச் சொந்தமான வாழை தோட்டத்தினுள் நுழைந்தது. தோட் டத்தைச் சுற்றி அமைக்கபட்டிருந்த சோலார் மின்வேலியை சாய்த்து விட்டு நுழைந்த யானைகள், ஓரிரு மாதங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நான்காயிரம் வாழைகளையும், அருகில் இருந்த ராஜன் என்பவரது தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற் பட்ட வாழை மரங்களையும் முறித்து சேதப்படுத்தியது. பதினோரு மாத பயிரான வாழை கள் வளர்ந்து பலனளிக்கும் நிலையில் அடியோடு அழிக்கப்பட்டது விவசாயி களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது. ஒரே இரவில், ஓராண்டு உழைப்பும், முதலீடும் வீணானதே என கலங்கி நிற்கின்றனர். யானை கள் விவசாய நிலங்களுக்குள் நுழை வதைத் தடுக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்க வில்லை எனக்கூறும் விவசாயிகள், யானைகள் காட்டை விட்டு வெளி யேறுவதைத் தடுக்க வனத்துறை தான் முயற்சிகள் எடுக்க வேண்டும். யானைகள் ஊருக்குள் நுழைந்த பின் அவற்றை விரட்டுவதால் எவ்வித பலனுமில்லை என்கின்றனர். யானைகளால் ஒரு ஏக்கர் வாழைக்கு ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டாலும் வனத்துறை சார்பில் ஏக்கருக்கு இருபத்தைந்தாயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. அது வும் பல்வேறு முயற்சிகள் மேற் கொண்டு பல மாதங்கள் அலைந்தா லும் ஒரு ஆண்டுக்கு பின்னரே இழப்பீடு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம் என வேதனை தெரிவிக்கும் வாழை விவ சாயிகள், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின் றனர். இல்லையெனில், யானைக ளால் சேதமடைந்த தோட்டங்களை மீண்டும் சீர்படுத்தவே ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய நிலையில், விவசாயத்தை இனி தொடர இயலாமல் போகும் என தெரிவிக்கின்றனர்.