கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு
கோவை, நவ. 26 – உள்ளாட்சி தேர்தல் பணிக்கான கோவை மண்டல இரண்டாம் கட்ட ஆயத்த கூட்டம் தேர்தல் ஆணையர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை யொட்டி தேர்தல் நடத்தும் அலுவ லர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார். தேர்தல் ஆணையர் தலைமையில் முதல் கட்ட ஆய்வு முடிவடைந்துள் ளது. இதனையடுத்து கோவை மண் டலத்திற்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட் டங்களில் இருந்து ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவ லர்கள் கலந்து கொண்ட இரண்டாம் கட்ட ஆயத்த கூட்டம் தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. இதில், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவது தொடர்பாகவும், தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்து வது, பாதுகாப்பு பணிகள், வாக்குப் பதிவு மற்றும் எண்ணிக்கை தொடர் பாக அரசு அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல், வாக்கு பதிவு இயந்திரங் கள் சரிபார்த்தல், வாக்கு சாவடி மையங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்து இந்த ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.