tamilnadu

img

புதிதாக 50 குடும்பத்தினர் சிபிஎம்- மில் இணைந்தனர்

நாகப்பட்டினம், அக்.18- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றி யம், காக்கழனி கிராமத்தில், 50 குடும்பத் தினர் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவிற்கு, ஏ.லெனின் தலைமை வகித்தார். ஏ.ஜெய பால், சி.சுந்தர், ஆர்.சங்கர், ஜி.சார் லெஸ், ஜே.சிவநேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சி.பி.எம். கீழ்வே ளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயரா மன் செங்கொடியை ஏற்றி வைத்தார்.   காக்கழனி மற்றும் சுற்று வட்டா ரங்களைச் சேர்ந்த 50 குடும்பங்களைச் சார்ந்த தோழர்கள், மேடைக்கு வந்து, சி.பி.எம். தலைவர்கள் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் சால்வைகள் அணிவிக்கப்பட்டு கெளர விக்கப்பட்டனர். முன்னதாக, மக்களிசைப் பாடகர் வெண்மணி எஸ்.மோகன் இங்கர்சால் எழுச்சிமிகு இயக்கப் பாடல்களைப் பாடினார். ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன், நூற்றாண்டு காணும் இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் சிறப்புகளை விளக்கிப் பேசினார். சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் என்.எம்.அபுபக்கர், எஸ்.சுபாதேவி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சி.பி.எம். கீழ்வேளூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.நடராஜன், இ.மாரிமுத்து, டி.துரைராஜ், டி.ஏ.முருகையன், வி.செல்வராஜ், ஏ.சந்திரசேகர், எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஜி.முருகேசன் நன்றி கூறினார்.