tamilnadu

img

டெங்கு பாதிப்பால் 5 வயது சிறுமி உயிரிழப்பு

அவிநாசி, டிச.6- அவிநாசி அருகே சிலுவைபுரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால், 5 வயது சிறுமி வெள்ளி யன்று உயிரிழந்தார். அவிநாசி அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(எ) ஆரோக்கியராஜ், சர்மிளா ஜூலி ஆகியோரது மகள் ஜெஸிந்தா(5). இச்சிறுமி கடந்த செவ்வாய் முதல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்ற னர். இதன்பின் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி ஜெஸிந்தா உயிரிழந்தார். இதனால் அப்ப குதியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

;