tamilnadu

img

முஸ்லிம் இளைஞர் உட்பட 2 பேர் அடித்துக் கொலை.. மேற்குவங்கத்தில் பசு குண்டர்கள் வெறியாட்டம்

கொல்கத்தா:
பசுவைக் கடத்தியதாக கூறி, இளைஞர்கள் 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம், கூச்பிகார்நகரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவி லுள்ள ஒரு கிராமம் வழியாக, 2 பசுமாடுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றுள்ளது. இதனைக் கண்ட ஒரு கும்பல், அந்த வேனை மறித்து நிறுத்தி, வேனில்இருந்தவர்கள் குறித்து விசாரித்துள்ளது.அப்போது ரபியுல் இஸ்லாம் என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரும், அவருடன் பிரகாஷ் என்பவரும் இருந்துள்ளனர். மேலும் இவர்கள், தின்ஹாட்டாவில் உள்ள ஒக்ராபரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.இந்நிலையில், பசுவைக் கடத்துகிறீர்களா? என்று கூறி, பிரகாஷை யும், ரபியுல் இஸ்லாமையும் வேனில்இருந்து கீழே தள்ளிய அந்த கும்பல், மூங்கில் கம்புகள், லத்தி மற்றும் இரும்புக் கம்பிகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.  வேனுக்கும் தீ வைத்துள்ளனர்.நீண்டநேரம் நடந்த இந்த தாக்குதலுக்குப் பின், சம்பவ இடத்திற்குவந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரகாஷையும், ரபியுலையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளைஞர்கள் 2 பேரும் இறந்து விட்டனர்.இதுதொடர்பாக 12 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ள னர். கடந்த ஜூலை மாதமும் இங்குள்ள டோர்ஸ் பகுதியில் இதே போல கும்பல் படுகொலை ஒன்று அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

;