tamilnadu

img

திருவனந்தபுரம்- காசர்கோடு சில்வர்லைன் அதிவிரைவு ரயில் பாதை திட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம், ஜுன் 11- திருவனந்தபுரம்-காசர்கோடு சில்வர் லைன் அதிவிரைவு ரயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையைக் கண்டறிய நிதி நிறுவனங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகுமாறு அரசு நிறுவனமான கே-ரெயில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. கடன் கிடைப்பதை உறுதி செய்ய ஜேஐசிஏ, கேஎப்டபிள்யு, ஏடிபி, ஏஐஐபி ஆகிய நிதி நிறுவனங்களை அணுக கே-ரயிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை 531 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் மணிக்கு 180 முதல் 200 கிலோ மீட்டர் வரை வேகத்தில் ரயில்கள் செல்ல முடியும். திருவனந்தபுரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் எர்ணாகுளத்துக்கும் நான்கு மணி நேரத்தில் காசர்கோடுக்கும் செல்ல முடியும். 9 பெட்டிகளில் 645 பேர் பயணம் செய்யலாம். வர்த்தகம், சாதாரணம் (பிசினஸ், ஸ்டாண்டர்ட்) என 2 வகுப்புகளில் இடவசதி  அளிக்கப்படும். 2025 இல் இந்த திட்டம் நிறைவடையும். கொச்சி விமான நிலையம் உட்பட 11 நிறுத்தங்களை கொண்டிருக்கும்.