tamilnadu

img

2 டிஒய்எப்ஐ ஊழியர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை.... ஓணத்தன்று நரவேட்டையாடிய காங்கிரஸார்

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் வெங்ஙாரமூட்டில் இரண்டு இந்திய ஜனநாயக வாலிபர்சங்க ஊழியர்களை திருவோணத் தன்று காங்கிரஸ் குண்டர்கள் நரவேட்டையாடி கொலை செய்தனர்.

திருவனந்தபுரம் தேவலக்காடு கிளை உறுப்பினர் மிதிலாஜ் (30),டிஒய்எப்ஐ கல்லிங்கில் முகம் கிளைதலைவரும், சிபிஎம் உறுப்பினருமான ஹக் முகம்மது (24) ஆகியோர் ஞாயிறன்று இரவு 12.30 மணியளவில் காங்கிரஸ் கட்சி குண்டர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.திருவோணத்தையொட்டி இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வெங்ஙாரமூடு தேம்பாம் மூட்டில் வைத்து இருவரையும் காங்கிரஸ் குண்டர்கள் தடுத்து நிறுத்திமுகத்திலும் மார்பிலும் கொடுவாளால் வெட்டினர். இதில் இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்கள் கோகுலம் மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் திங்களன்று உடற்கூறாய்வு செய்யப்பட்டன. இருவரது உடலுக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.இந்த படுபாதகத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி சஜீவ் தலைமறைவாகஉள்ள நிலையில் அவரது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு டிஒய்எப்ஐ தலைவர் பைசலை தேம்பாம்மூடில் வைத்து காங்கிரஸ் குண்டர்கள் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

;