முதியோர் பென்சன், இலவச வீட்டுமனைப் பட்டா, 100 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் சிங்காரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் எத்திராஜ் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, நிர்வாகிகள் குப்பன் முத்துக்குமார், வேலு, பொன்னுசாமி, ரத்தனம், மலர், வசந்தா ஆறுமுகம் மற்றும் கலந்து கொண்டனர்.