கிருஷ்ணகிரி ஆக. 13- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்தில் அண்ணசந்திரம் முதல் பேரிகை வரை புதிதாக 100 அடி சாலை அமைப்ப தற்காக நில உரிமையாளர்கள், விவசாயி களின் அனுமதி பெறாமல் அதிகாரிகள் அள வீடு செய்தனர். இதையறிந்த ஊர் பொது மக்கள் விவசாயிகள் திரண்டு எதிர்ப்பு தெரி வித்து அளவிடுவதை தடுத்து நிறுத்தினர். சூளகிரி வட்டத்தில் மின்வாரியம் ஏற்க னவே 68 ஏக்கர் நிலத்தையும், சிப்காட்டின் தனியார் தொழிற்சாலைகளுக்கு 120 ஏக்கர் நிலத்தையும் மக்கள் எதிர்ப்பை மீறி அடி மாட்டு விலைக்கு எதேச்சதிகாரமாக எடுத்த னர். (நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவில்லை). தற்போது 100 அடி சாலை என்று கூறி ஒட்டர் பாளையம், அட்ரகாணப்பள்ளி, ஒட்றப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, அண்ணசந்திரம் ஊராட்சி பகுதிகளில் உள்ள நிலங்களை எடுக்க அளவிட்டுள்ளனர். இந்த பகுதிகள் தென் பென்னை ஆறு, அதன் கால்வாய்கள் மூலம் செழிப்பான விவசாயம் நடக்கும். சூளகிரி முதல் பேரிகை வரை இருக்கும் சாலையை சீர்படுத்தினாலே இப்பகுதியின் போக்குவரத்திற்கு போது மானது. 100 அடி அகல சாலை அமைக்கும் அளவிற்கு இந்த இரு ஊர்களில் பெரிய வர்த்தக மையங்கள் கிடையாது. ஏற்கனவே சூளகிரியை சுற்றி 200 ஏக்கர் விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலை யில், மீதமுள்ள விவசாய நிலங்களையும் சாலை என்ற பெயரில் கையகப்படுத்துவது அவசியமில்லை என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்க நிர்வாகிகள் கூறினார்கள். மேலும் அளவீடு செய்வதை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். உடனடியாக அளவீடு செய்வதை நிறுத்த வில்லை என்றால் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.