tamilnadu

img

செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கேள்வி;  நடவடிக்கைக்கு சென்றார் ஆட்சியர் ஜெயகாந்தன்


சிவகங்கை, மார்ச் 6- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மூடிக்கிடக்கும் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெயக்காந்தன்  உத்தரவிட்டார். . திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோவில் தெரு மற்றும் தம்பிபட்டி பகுதியில் 2011-ஆம் ஆண்டு மத்திய அரசு உதவியுடன் தனியார்  நிறுவனம் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தது. மூன்று ஆண்டுகள் மக்களுக்கு குடிநீர் வழங்கிய அந்நிறுவனம் திடீரென குடிநீர் நிலையத்தை மூடியது. இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்முருகேசன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோர் இத்திட்டம் கிடப்பில் கிடப்பதை செயல்படுத்த வலியுறுத்தி தொடர்ந்து பேசிவந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மாவட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் சிவகங்கை நாடளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பேசினார். இதையடுத்து வியாழக்கிழமை குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது மீண்டும் குடிநீர் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாவட்ட வளர்ச்சி மன்ற கண்காணிப்பு குழு உறுப்பினர் எஸ்.எம்.பழனியப்பன், திருப்பத்தூர் வட்டாட்சியர் விஜயலெட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.