tamilnadu

img

ஆக்கிரமிப்பின் பிடியில் தர்கா சந்திராம்பிகை ஏரி

கிருஷ்ணகிரி, டிச.10- ஓசூர் வட்டம் பெங்களூரு பிரதான சாலை யில் இருந்து  ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சந்திராம்பிகை தர்கா ஏரி. 1980களில் பறந்து விரிந்து கடல் போல் தண்ணீர் நிறைந்திருந்த ஏரி. இப்போது கழிவு  நீர் தேங்கும் குட்டையாக “எப்பிடி இருந்த  நான் இப்பிடி ஆகிட்டேன்”என்பது போல பாதி  கூட தேராத நிலைக்கு குறுக்கப்பட்டுள்ளது.  கறையோரங்களில் மண்னை, குப்பை களை கொட்டி மூடி தனியார் மருத்துவ மனைகள் வணிக வளாகம், ஸ்கிராப் குடோன்  கள், தாழ்வான தெற்கு பகுதியில் விவசாயம்,  நிலவணிகம்,தேசிய நெடுஞ்சாலை ஓரமும் மேற்கு பகுதியிலும் வீடுகள், தொழிற் கூடங் கள் என குறுக்கப்பட்டு,ஒடுக்ககப்பட்டு வரு கிறது. பல ஆண்டுகளாக ஏரியை சுத்தப்படுத்து வதாகக் கூறி சில தனியார் தொழிற்சாலை களும், அங்கு மீன்பிடிக்க உரிமை பெற்றவர்க ளும் ஆகாயத்தாமரை செடிகளை வாரி  அப்புறப் படுத்தாமல் கறை ஓரம் ஏரிக் குள்ளேயே மேடாக குவித்தனர். அவைகள் மக்கிப் போய் கிழக்குக்கறையோரம் ஏரிக்குள் 70 அடி அகலத்திற்கு மேல் மேடாகி யுள்ளது. சமீப ஆண்டுகளில் செய்யப்பட்ட இந்த முறையற்ற செயல்களால் ஏரி இப்போது குட்டை போல் மாறி வருகிறது. தற்போது கூட மேடாக்கப்பட்டு ஒரு கடை யும் மண் தொட்டிகள் விற்பபனையும் நடை  பெற்று வருகிறது.  இது குறித்து ஓசூர் மாநகரின் எந்த அதி காரிகளும் பல ஆண்டுகளாய் கண்கொள்வ தாகத் தெரியவில்லை. பல தரம் பல  செய்தித்தாள்களில் ஆக்கிரமிப்பு குறித்து  செய்திகள் வெளியிடப்பட்டும், ஓசூருக்கு  வரும் சாராட்சியர்களோ, வட்டாட்சியர் களோ, ஆணையாளர்களோ, நீர் வளத்துறை  அலுவளர்ககளோ சிறிதும் கண்டுகொண்ட தாகத் தெரியவில்லை. இது ஏன் என்றும் தெரியாமல் பொதுமக்களும், சமூக ஆர்வலர்  களும் மனம் வெதும்பியுள்ளனர். கடந்த 2011ல் ஜெயலலிதா முதல்வரான போது உள்ளாட்சித் துறை அமைச்சராய் இருந்த கே.பி.முனிசாமி இதே ஏரியை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி படகு கள் விட்டு சிறிய பொழுதுபோக்கு இடமாக மாற்றப் போகிறோம் என உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதை செய்யவில்லை என்பது ஒரு புறமிருக்க, ஏரியை காப்பாற்ற,  ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓசூர் சாராட்சி யரும், ஆணையாளரும், வட்டாட்சியரும் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், சமூக ஆர்வளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.