tamilnadu

img

காலில் ரத்த காயத்துடன் விளையாடிய வாட்சன்

ஐபிஎல் தொடரின் 12-வது சீசனில் மும்பை அணி 1 ரன் வித்தியா சத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. சென்னை அணி வெற்றிபெறக் காலில் ரத்த காயத்துடன் போராடிய ஷேன் வாட்சன் (80 ரன்கள்) ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்ததால் சென்னை அணியின் கோப்பை கனவு தகர்ந்தது. சென்னை அணி தோற்றபோதிலும் ரத்த காயத்துடன் போராடிய ஷேன் வாட்சனின் அர்ப்பணிப்பு உணர்வை சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி நெட்டிசன்கள், இதர ஐபிஎல் அணி ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.இறுதி போட்டி முடிந்த பின்பு வாட்சனுக்கு இடது முழங்காலில் 6 தையல் கள் போடப்பட்டுள்ளது. காலில் ரத்தக்கறை யுடன் வாட்சன் பேட் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.