tamilnadu

img

இந்தியத் தரகரால் சிக்கிய ஷாகிப்

சூதாட்ட விவகாரம் 

வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹாசனிடம் 2 ஆண்டுகளுக்கு முன் வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் சூதாட்டம் தொடர்பாக தொலைப்பேசியில் பேசப்பட்டுள்ளது. இதில் உடன்பாடு இல்லையென ஷாகிப் மறுத்துவிட்டார்.  ஷாகிப் குற்றம்செய்யவில்லை என்றாலும் ஐசிசி விதிப்படி சூதாட்ட தரகர் தன்னை அணுகியதைச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றுக்குத் தகவல் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார். இந்த விவகாரம் ஐசிசி-யின் ஊழல் தடுப்பிற்குச் செல்ல, துரித விசாரணையில் களமிறங்கிய ஐசிசி ஒரு வருட முழு தடை மற்றும் 12 மாத கால தற்காலிக நீக்கம் ஆகியவற்றைத் தண்டனையாக விதித்தது.  இதனால் ஷாகிப் 2 வருட காலத்திற்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.       சூதாட்ட தடை காரணமாக எம்சிசி (மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்) எனப்படும் உலக கிரிக்கெட் குழுவிலிருந்து ஷாகிப் விலகியுள்ளார். ஷாகிப் விலகலை எம்சிசி-யும் ஏற்றுக்கொண்டது. ஷாகிப்பிற்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு தடை வங்கதேச கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்களால் வளரும் சூதாட்டம்...

வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் இந்தியச் சூதாட்ட தரகரான தீபக் அகர்வால் என்பவர் தலைமையிலான சூதாட்ட குழு ஷாகிப் அல் ஹாசனை மேட்ச் பிக்சிங்கிற்கு அணுகியுள்ளது. தொடர்ந்து 2018 ஜனவரி மாதம் நடை பெற்ற முத்தரப்பு தொடரிலும் (ஜிம்பாப்வே, இலங்கை) அணுகி யுள்ளது. ஆனால் ஷாகிப் சூதாட்டத் திற்கு இணங்கவில்லை. முத்தரப்பு தொடரில் தொடர் நாயகன் விருது பெற் ஷாகிப் அல் ஹாசனை தீபக் அகர்வால் வாழ்த்தியுள்ளார். தொடர்ந்து பிட்காயின், டாலர் கணக்கு கள் குறித்து ஷாகிப்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். ஷாகிப்பின் வங்கி கணக்கு பெற்ற தீபக் ஒருகட்டத்தில் சந்திக்க விரும்புவதாகக் கூற நிலையில், அதற்கு பின்னர் என்ன ஆனது என்பது தெரியவில்லை. மேற்கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஷாகிப் மற்றும் தீபக் அகர்வால் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் மூலம் பெறப்பட்டது.   சூதாட்ட வியாபாரத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் நாளுக்கு நாள் ஜெட் வளர்ந்து வருகிறது. பணவெறி பிடித்த தீபக் அகர்வால் கும்பல் வங்கதேச அணியின் முக்கிய வீரரை  பழிகெடா ஆக்கியுள்ளது.