கிரிக்கெட் விளையாட்டில் 150 கிமீ வேகத்தில் எகிறும் பந்தை பேட்ஸ்மேன்கள் எளிதாகத் தடுத்து ரன் குவிப்பார்கள். ஆனால் 90 கிமீ வீசப்படும் சுழற்பந்து வீச்சைப் பந்துகளைக் கணிக்க பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். இதற்குக் காரணம் பேட்ஸ்மேன்களின் மனநிலை தான். 150 கிமீ வேகத்தில் பந்தை எதிர்கொள்ள அதற்கான மனநிலையுடன் பேட்ஸ்மேன்கள் தயார் நிலையில் இருப்பதால் 150 கிமீ என்ன அதற்கு மேலான வேகத்தில் எகிறும் பந்துகளைக் கூட பந்தாடுவார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சில் அப்படி அல்ல பந்து எங்குத் திரும்பும் எவ்வளவு வேகத்தில் ஸ்விங் ஆகும் என்ற சந்தேக மனநிலையில் இருப்பதால் சுழற்பந்து வீச்சில் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள்.