tamilnadu

ஊக்கமருந்து பிரச்சனை

அதிரடிக்குப் பெயர் பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ் களத்தில்எவ்வித பதற்றம் இல்லாமல் சிறப்பாக விளையாடக் கூடியவர். தீவிர மது பிரியரான ஹெல்ஸ் ஊக்க மருந்து மருத்துவ பரிசோதனையில் தோல்வியடைந்ததால் 21 நாள் தடை உத்தரவு பெற்றுள்ளார்.அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஹெல்ஸ் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி தண்டனை பெற்றுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஹெல்ஸ் தடை உத்தரவு பெறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் சக வீரர் பென் ஸ்டோக்ஸ் உடன்இணைந்து மதுபான விடுதியில் தகராறு செய்ததற்காகஏற்கெனவே தண்டனை அனுபவித்தார்.உலகக்கோப்பைதொடங்கும் முன்பே தடை காலம் நீங்கிவிடும் என்றாலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்துத் தான் ஹெல்ஸின் உலகக்கோப்பை கனவு பலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

;