tamilnadu

img

ஸ்ரீ பெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 6 பேர் பலி



காஞ்சிபுரம்

நெமிலியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலியில் பாதுகாப்பான உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கியது. இந்த விபத்தில் பணியில் இருந்த 6 துப்புரவு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முதல் கட்டத்தகவல்கள் வெளியாகி உள்ளது.  


;