tamilnadu

நகைக்கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை

காஞ்சிபுரம், நவ.4-  காஞ்சிபுரம் மாவட்டம், படூர் கூட்டுரோட்டில் நகை கடை மற்றும் அடகுக் கடை உள்ளது. இதன் உரிமை யாளர் நாராயண்லால் (48). இவர்  மாகரல் கிராமத்தி லிருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்து செல்வார். இந்நிலையில், ஞாயி றன்று மாலை கடையினை மூடிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக  கோய ம்பத்தூர் சென்றுவிட்டார். பின்னர் இவரின் தம்பி சர்தா ராம்  திங்களன்று (நவ.4) கடையினை திறந்தபோது, சுவற்றில் துளையிட்டு, பொருட்கள் சிதறிக்கிடப்ப தைக் கண்டு அதிர்ச்சியடை ந்தார்.  உடனே உத்திரமேரூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இட த்திற்கு வந்த காவல்துறை யினர் பார்வையிட்டனர். மேலும் வெள்ளிப் பொரு ட்கள் மட்டும் கொள்ளைய டிக்கப்பட்டு ள்ளதாக கூறப்படுகிறது. தங்க நகை இருந்த பெட்டகத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அதை அப்படியே விட்டு சென்ற தால் தங்க நகைகள் தப்பியதாக காவல்துறை யினர் கூறுகின்றனர்.