tamilnadu

img

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று... 

காஞ்சிபுரம்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் தினசரி பாதிப்பு ஜெட் வேகத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் 164 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை மொத்தமாக 4,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் பலியாகியுள்ள நிலையில், 1,932 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், அம்மாவட்டத்தின் ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார். ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்து என்பது குறிப்பிடத்தக்கது.  

;