tamilnadu

img

குடகு மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை

பெங்களூரூ:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கை யால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தாழ்வான பகுதிகளான மடிக்கேரி, மங்களதேவி நகர், சாமுண்டீ ஸ்வரி நகர், இந்திரா நகர் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறத் தொடங்கி உள்ளனர். நிலச்சரிவு ஏற்படும் என்று கருதப்படும் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.