tamilnadu

img

பெங்களூரு: கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி


பெங்களூருவில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


கர்நாடகா தலைநகர் பெங்களூருவின் யஷ்வந்த்பூர் பகுதியில் உள்ள வேளாண் பொருட்கள் உற்பத்தி குழுவின் நிலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதில் 10 அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவதற்கும், கார், பைக் போன்ற வாகனங்களை நிறுத்தும் தளமும் அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் எதிர்பாரத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்தது.  இந்த விபத்தில் கட்டிடத்தில் தங்கி இருந்த பீகாரைச் சேர்ந்த ராகேஷ்(25), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகுல் கோசுவாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்தனர்.  பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் கட்டிடத்தின் ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


;