கரூர், ஆக.22- தலித் விடுதலை இயக்கத்தின் மாநி லப் பொதுச்செயலாளர் ச.கருப்பையா, கரூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் கூறியதாவது: கரூர்- மதுரை சாலையில் உள்ள வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆய்வு துறை சார்ந்த படிப்புகள் உள்ளன. 2019-20 கல்வி ஆண்டில் சுமார் 500 ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் அரசாணை எண் 92ன் படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி கல்லூரி களில் மற்றும் சிறுபான்மையின ருக்கான கல்வி நிறுவனங்களில் பயி லும் மாணவர்களுக்கும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதி திராவிடர் மாணவர்களி டம் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்ட ணம் வசூலிக்கக் கூடாது எனவும், சம் பந்தப்பட்ட கல்லூரிக்கு அரசே அந்த தொகையை வழங்கும் என கூறப்பட் டுள்ளது. ஆனால் வள்ளுவர் கலை அறி வியல் கல்லூரியில் கடந்த 2014-15 கல்வி ஆண்டு முதல் 2018-19 கல்வி ஆண்டு வரை சுமார் 5 ஆண்டு கல்லூரியில் பயி லும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற் றும் மதம் மாறிய கிறிஸ்தவ மாண வர்களை கட்டாயப்படுத்தி அரசாணை எண் 92 கெதிராகவும் ஒவ்வொரு மாண வர்களிடம் இருந்தும் ரூ20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கல்வி கட்டண மாக (டியூசன் பீஸ்) வசூலிக்கப்பட் டுள்ளது. ஆனால் தமிழக அரசு மேற்கண்ட மாணவர்களுக்கு சுமார் ரூ.3500 முதல் 4500 வரை கல்விக் கட்டணமாக வழங்குகிறது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கண்ட மாண வர்களுக்கு அரசு வழங்கிய சுமார் ஒரு கோடி ரூபாய் கல்விக் கட்டணத்தை திருப்பி மாணவருக்கு வழங்காமல் உள்ளது. இதே போன்று கரூர் மாவட் டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவம் சார்ந்த கல்வி நிறு வனங்களும், தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 50க்கும் மேற்பட்ட அனைத்து நிறு வனங்களிலும் இதே நிலை தான் உள் ளது. இக்கல்வி நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுத்திட கரூர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். இதில் நிர்வாகி கள் இராஜகோபால், சுந்தரம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.