tamilnadu

தோட்டத் தொழிலாளி மர்ம மரணம்

நாகர்கோவில், ஜூன்.6- குலசேகரம் அருகே மணியங்குழி வலிய மலை பகுதியை  சேர்ந்தவர் சுரேஷ்குமார் (35). தோட்ட தொழிலாளியான இவ ருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ள னர். சுரேஷ்குமார் மலைகிராமத்தில் உள்ள தோட்டத்தில் விவ சாய வேலை செய்து வந்தார்.  வியாழனன்று காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற அவர் அன்று மாலை வீடு திரும்பவில்லை. இதனால்  குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடினர். ஆனால் அவரை எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதைய டுத்து வெள்ளியன்று கணவரை தேடி அவரது மனைவி மலை கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் உள்ள 10 அடி ஆழ குழியில் சுரேஷ்குமார் பிணமாக கிடந்தார்.  இதை கண்ட அவரது மனைவி கதறி அழுதார். மேலும் இது குறித்து குலசேகரம் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். காவல் துறையினர் சுரேஷ் குமாரின் உடலை கைப் பற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.