கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன், மாநில நிர்வாகிகள் பி.ஜீவா, டி.வில்சன், மாவட்டத் தலைவர் சார்லஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறை அத்து மீறி கைது செய்ததை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க வடசென்னை மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார் மாநில துணைச் செயலாளர் பாரதி அண்ணா.மாநில துணை தலைவர் பாபு . தென்சென்னை மாவட்டச் செயலாளர் சாந்தி. வடசென்னை மாவட்ட செயலாளர் கீ.ராதை, மாநிலத் துணைச் செயலாளர் எஸ் கே மாரியப்பன் .மாநில துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.