சிதம்பரம், நவ. 2- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு தினசரி புறநோயாளி கள், உள்நோயாளிகள் என ஆயிரக்கணக்கா னோர் வருகின்றனர். தற்போது டெங்கு, மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். ஆனால் மருத்துவ மனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை. இந்நிலையில் சனிக்கிழமை காலை மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வந்தி ருந்தனர். ஆனால் மருத்துவமனையில் 2 மருத்து வர்கள்தான் இருந்தனர். இதனால் நோயாளி கள் மிகவும் சிரமமடைந்தனர். மேலும் சரியான முறையில் மருந்து மாத்திரைகள் வழங்குவது கிடையாது. காட்டுமன்னார்குடி அருகேயுள்ள உடை யார்குடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்வ ரின் மனைவி சகுந்தலா நாய் கடித்து விட்டது என்று மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது நாய் கடிக்கு மருந்து இல்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தொடர்பு கொண்டு கேட்ட போது நாய் கடிக்கு மருந்து தட்டுபாடாக உள்ள தாகக் கூறியுள்ளனர். எனவே காட்டுமன்னார்குடி மருத்துவ மனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், இரவு நேரங்களில் மருத்துவர் பணி யில் இருக்க வேண்டும், நாய் கடிக்கான மருந்து உள்ளிட்ட அனைத்து மருத்துகளும் நோயாளி களுக்கு தங்குதடையின்றி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.