கடலூர், ஜூன்.22- என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்ட மக்க ளுக்கு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கை களை முன்வைத்து வெகுஜன அமைப்பினர் பிரச்சார இயக்கமும், முற்றுகை போராட்ட மும் நடத்த திட்டமிட்டுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற வேண்டும், நிலம் கொடுத்த விவசாயிகளு டைய பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க வேண்டும், சிஎஸ்ஆர் நிதியை முழுமை யாக கடலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு, விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக கருத்தரங்கம், பொதுக் கூட்டம் என என்எல்சி சுற்றியுள்ள கிராமங்க ளில் பிரச்சார இயக்கத்தை கொண்டு செல்வது எனவும், ஜூலை இறுதியில் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஜூலை 15ஆம் தேதி முதல் 20 தேதி வரை குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, புவனகிரி, விருத்தாசலம், நெய்வேலி ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்டப் பொருளாளர் எஸ்.தட்சி ணாமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.ஜீவானந்தம், ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஆர்.ஆளவந்தார், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் லெனின், துணைச் செய லாளர் தமிழ்மணி, மாதர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தைனிஸ் மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.