tamilnadu

img

நிலம் கையகப்படுத்தி 25 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்காமல் அவதிப்படும் செங்காட்டு காலனி மக்கள்

கடலூர், அக்.1- கடலூர் வட்டம் கீழ்அழிஞ்சுப்பட்டு செங்காட்டு காலனி மக்களுக்கு மனைப் பட்டா  வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் கடலூர் ஒன்றியத் தலைவர் ஏ.வைத்தியலிங்கம், செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.தமிழ ரசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வே எண் 14-2பி  அயன்புஞ்சை நிலத்தை  2.92 ஹெக்டேர் நிலம் 1992ஆம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறையால் மனைப்பட்டா வழங்க கையகப்படுத்தப்பட்டது. இந்நிலம் இன்றளவும் ஆதிதிராவிடர் நத்தம் என்று தான் கிராம கணக்கில் உள்ளது. ஏறக்குறைய  கால் நூற்றாண்டை கடந்தும் கூட செங்காட்டு  காலனி ஆதிதிராவிட மக்களுக்கு இந்த  இடத்தை வரன்முறை செய்து வீட்டுமனை  வழங்கவில்லை. நிலத்தின் உரிமையாளர்கள் கூடுதல் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதை காரணம் காட்டி,  பயனாளிகளுக்கு பட்டா வழங்க ஆதிதிராவி டர் நலத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மேலும் வீட்டுமனை வழங்குவதற்கு நீதி மன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. செங்காட்டு காலனியில் வீடின்றி  ஒரு குடிசை யில் நான்கு குடும்பங்கள் வரை மிகுந்த நெருக்  கடியில் வசிக்கின்றனர். 113 குடும்பங்கள் வீட்டு மனை கோரி தனிநபர் மனுக்கள் வழங்கி உள்ளனர். இவர்களுக்கு வீட்டுமனை வழங்க  கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் 50 விழுக்  காடு நிலம் போதுமானது. மீதி நிலத்தை அரசு  முடிவு செய்தால் நிலத்தின் உரிமையாளர்க ளிடமே வழங்கி விடலாம். இதனால் அரசுக்கு  நிதிச் சுமையும் குறையும், எந்த நோக்கத் திற்காக ஆதிதிராவிட நலத் துறை நிலத்தை கையகப்படுத்தியதோ அந்த நோக்கம் நிறைவடைய வீடின்றி பரிதவிக்கும் மக்கள் பயனடைய துரித நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு மனைப்பட்டா வழங்க ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.