கடலூர், ஆக. 7- கடலூர் நகராட்சியில் உள்ள வணிக கடைகளுக்கு தரை வாடகை, கடை வாடகையை பத்து மடங்குக்கு மேல் உயர்த்தியுள்ளதால் வியாபாரி கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். கடலூர் நகராட்சியில் திருப்பா திரிப்புலியூரில் உள்ள பான்பரி மார்கெட்டில் 150க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் உள்ளன. அதேபோல் கடலூர் மஞ்சக்குப்பத்தில் பக்தவச்சலம் மாக்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடலூர் முதுநக ரில் ஏராளமான கடைகள் உள்ளன. நகராட்சி முழுமைக்கும் 750க்கும் மேற்பட்ட கடைகளும், தரை வாடகை கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு ஏற்கனவே ஒரு சதுர அடிக்கு 2 ரூபாய் வீதம் நக ராட்சிக்கு வாடகை கொடுத்து வந்த னர். ஆனால் தரை வாடகை தற்போது ஒரு சதுர அடிக்கு 40 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. குறிப்பாக ரூ. 400 மாத வாடகை கொடுக்கும் ஒரு வியாபாரி தற்போது ரூ. 4000 வரை கொடுக்க வேண்டும். அதேபோல் கடை வாடகையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. தரை வாடகையில் உள்ளவர்கள் தங்கள் சொந்த செலவில் கூரை போட்டு, மின் இணைப்பு பெற்று கடையை மிகுந்த சிரமத்திற்கிடையில் நடத்தி வரும் சூழலில், ஏற்கனவே நிர்ண யிக்கப்பட்ட வாடகையை கூட கட்ட முடியாத நிலையில் பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் வியா பாரிகளுக்கு இந்த உயர்வு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள் ளாட்சி அமைப்புகள் இல்லாத நிலை யில் இப்படி நகராட்சி நிர்வாகம் தான் தோன்றித்தனமாக வாடகையை உயர்த்தி உள்ளதற்கு வியாபாரிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள னர். கடை வாடகையை மட்டும் உயர்த்தி உள்ள நிர்வாகம் இந்த வியாபாரிகளுக்கு எந்தவித அடிப் படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. கடலூர் திருப் பாப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்த பிறகு ரயில்வே நிர்வாகம் பான்பரி மார்கெட்டுக்கு வரும் சாலையை அடைத்துள்ளனர். சரக்கு வாகனங்கள் வருவதற்கு வழி யின்றி 6 மாதமாக அவதிப்படு கின்றனர். அதேபோல் கடலூர் முதுநகரில் மழைக்காலங்களில் சாலையில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி கடைகளுக்குள் செல்லும் நிலை உள்ளது. இப்படி அடிப்படை வசதிகள் இன்றி சங்கடப்படும் வியா பாரிகளுக்கு ஈவு இரக்கமின்றி வாடகை மட்டும் அதிகரித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உள் ளாட்சி அமைப்பு நிர்வாகம் வரும் வரை தற்போதைய வாடகையை வசூ லிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே நகரக் குழு உறுப்பினர் ஆர்.ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.சுப்புராயன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பாஸ்கரன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.