சிதம்பரம், டிச. 21- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு நந்த னார் ஆண்கள் பள்ளியின் முகப்பில் சுவாமி சகஜானந்தா மணிமண்டபம் உள்ளது. இந்த வளாகத்தில் (அரசு வேலைவாய்ப்பு தேர்வு களுக்கு) ஏழை மாணவர்கள் கல்வி பயிற்சி பெறும் வகையில் கல்வி பயிற்சி மையம் அமைத்துத் தரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கேஇ ரங்கராஜனிடம் மணிமண்டப ஒருங்கி ணைப்பாளர் பாலையா கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, சகஜானந்தா மணி மண்டப வளாகத்தில் பயிற்சி மையத்திற்குக் கட்டிடம் கட்டுவதற்குக் கடந்த ஆண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ23.50 லட்சத்தை டி.கே. ரங்கராஜன் ஒதுக்கினார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் கல்வி பயிற்சி மையம் அமைக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியதால் கால்கோள் விழா நடைபெற்றது. இதில் சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் மற்றும் பொதுபணித்துறையினர் கலந்து கொண்டனர். இந்த இடத்தில் கல்வி பயிற்சி மையம் அமைவதால் இந்த பள்ளியில் படிக்கும் மாண வர்கள் உள்ளிட்ட அனைத்து ஏழை மாண வர்களும் அரசு வேலைவாய்ப்புக்கான தேர்வு களில் பயிற்சி பெற உதவியாக இருக்கும். அதே போல் தமிழக அரசிடம் மணிமண்டப வளாகத்தில் நூலகம் ஒன்று அமைத்துத் தரக் கோரிக்கை விடுத்துள்ளோம் அதனைத் தமிழக அரசு நிறைவேற்றும் என்று நம்பிக்கை உள்ளதாக மணிமண்டப ஒருங்கிணைப்பு குழு வினர் தெரிவித்தனர்.