tamilnadu

சிதம்பரம் நகராட்சி ஆணையர் மாற்றம்

சிதம்பரம், ஜூலை 30- சிதம்பரம் நகராட்சி ஆணையராக செயல்பட்டுவந்த சுரேந்தரஷா மற்றும் நகராட்சி ஊழியர் மீது நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் சிதம்பரம் நகராட்சியில் ஒப்பந்ததாரருக்கு வைப்புத்தொகையை இரண்டுமுறை வழங்கியது, பொதுமக்கள் தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்டவைகளுக்கு பணம்  கட்டியதை செக் மூலம் வாங்கியதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. வாங்கப்பட்ட செக் இன்னும் வங்கியில் செலுத்தாமல் அப்படியே உள்ளது போன்ற குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது. இந்நிலையில் சிதம்பரம் நகராட்சி ஆணையராக இருந்த சுரேந்தரஷாவை மேட்டூர் நகராட்சி ஆணையராக மாற்றம் செய்துள்ளனர்.  இதனை அறிந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த செய்தியை  சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.