தரங்கம்பாடி, ஏப்.29- மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் அடுத்துள்ள மாத்தூர், பூம்புகார் பகுதிகளை சேர்ந்த 25 கூலித்தொழிலாளர்கள் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சிக்கி தவிப்பதாக தொழிலாளர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கூறியதோடு உணவின்றி பசியில் சிக்கி தவிக்கும் அவர்களை உடனடியாக மிட்டுத்தர வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாத்தூர் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன்(36), மணிகண்டன்(32),இனியன்(30),எழிலரசன்(28), மற்றும் ஆக்கூரை சேர்ந்த சேகர்(54), .குமார்(34),கும்பகோணத்தை சேர்ந்த ,கண்ணன் ஆகியோர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியிலும் ,பூம்புகாரை சேர்ந்த முத்துக்குமரசாமி(42), ரகுராமன்,வீரா(20), மருதவாணன்,அய்யப்பன்(குரங்குபுத்தூர்),இளங்கோவன் ,.ஸ்ரீதர்,சிவராமன்,ராமகிருஷ்ணன்,.மணிகண்டன் ,விக்னேஷ், மாத்தூரை சேர்ந்த குமரேசன், ,மூர்த்தி,மணிகண்டன்,.செல்வமணி,இந்திரகுமார் ஆகியோர் கர்நாடக மாநிலம் பிதர் மாவட்டம்,பெனக்நல்லி பகுதியிலும் கூலி வேலை செய்வதற்காக ஜனவரி மாதத்தில் சென்றுள்ளனர்.
கொரோனா நோய் தொற்றுக்கார ணமாக அமல்படுத்த ப்பட்ட 144 தடை உத்தரவு காரணமாக வேலைக்கு சென்ற இடங்களில் முடங்கி கிடப்பதாகவும் உணவுக்கு வழியின்றி கடும் அவதியுறுவதாக செல்போனில் பேசுவதாக அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளதோடு அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லையென்றும் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு மீட்டுத்தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கூறிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ் கூறுகையில், கூலி வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு சென்று சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.