சென்னை,பிப்.7- அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர வையிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அக் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,“தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து வரம்பு மீறி பேசி வருகிறார். அண்மை யில் மதவெறிக் கலகத்தை தூண்டும் வகையில் “இந்து பயங்கரவாதம் உருவாகும்” என மதச்சிறு பான்மை மக்களை மிரட்டியுள்ளார். நாடு முழுவதும் கும்பல் வன்முறையில் ஈடுபட்டு வரும் மதவெறியர் களை ஊக்கப்படுத்தியுள்ளார் அமைச்சர். மதவெறி சார்ந்து பேசியதன் மூலம் அரசியல் சட்டத்தின்படி எடுத்துக் கொண்ட உறுதிமொழி மற்றும் ரகசிய காப்புப் பிரமாணத்தை அப்பட்ட மாக மீறியுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை சிறுமைப்படுத்திய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மதவெறிப் பேச்சை வன்மையாகக் கண்டிப்பதுடன் ரகசிய காப்பு உறுதிமொழியை மீறிய அவரை அமைச்சர வையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.