tamilnadu

img

ஐஏஎஸ் அதிகாரி  4 பேர் இடமாற்றம்

சென்னை:
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார் ஜடாவத் வேளாண்மைத்துறை துணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் கோவை மாநகராட்சி பள்ளிகளில் மூன்றாம் மொழி குறித்த பிரச்சினையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் கோவை மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பழனி கோவில் நிர்வாக அதிகாரி ஜெயசந்திரபானு ரெட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;