tamilnadu

img

சென்னை ஐஐடி முன்பு திமுக போராட்டம்

சென்னை,நவ.15- சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். கிண்டியிலுள்ள ஐஐடி முன்பு தி.மு.க. மாணவர் அணி துணைச் செயலாளர் கவி நேசன் தலைமையில் போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது மாணவி தற்கொ லைக்கு காரணமான பேராசிரியர் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். அகில இந்திய மாணவர் பெரு மன்றம் சார்பிலும் போராட்டம் நடந்தது. 

;