எஸ்.வலையபட்டி தலித்மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றிருந்த நிலையில் பந்தல் அமைப்பதற்கும், நாற்காலிகள் போடுவதற்கும் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. பந்தல் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில் என்ன செய்வ தென யோசித்த காவல் துறை, 200-க்கும் மேற்பட்ட நாற்காலிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த தலித் மக்கள் தரையில் அமர்ந்திருந்தனர். இதற்கு தலித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தலித் மக்கள் என்றால் தரையில் தான் அமரவேண்டுமா; சாதி ஆதிக்க சக்திகள் தீண்டாமையை கடைப்பிடிப்பதா? என குற்றம்சாட்டினர். பின்னர் ஒரு கட்டத்தில் தலித் மக்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நாற்காலிகளை தூக்கி வந்து பந்தலில் போட்டு அமர்ந்து தங்களது உரிமையை நிலை நாட்டினர்.