tamilnadu

img

நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

ஆம்பூர், மே 13 - காய்கறி கடைகளை சேதப்படுத்திய வாணி யம்பாடி நகராட்சி ஆணை யாளர் சிசில் தாமஸ் மீது  நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோட்டாட்சியர் அலு வலகத்தில் மனு அளிக்கப் பட்டது. இது தொடர்பாக கட்சி யின் வாணியம்பாடி தாலுகா குழுச் செயலாளர் இந்துமதி அளித்துள்ள அந்த புகாரில், வாணியம்பாடி சி.எல்.சாலை ஓரமாக பூங்கொடி என்ப வர் சாலையோர பழக்கடை  ஒன்றை நடத்தி வருகிறார். மே 12 அன்று அவ்வழியாக சென்ற நகராட்சி ஆணையா ளர் சிசில் தாமஸ், அங்கே வியாபாரத்திற்காக வைத்தி ருந்த காய்கறி, பழங்களை வாரி இறைத்ததோடு, வண்  டிகளை குப்புற கவிழ்த்து  அராஜகமாக நடந்து கொண்  டுள்ளார். எனவே, அதிகார  துஷ்பிரயோகத்தில் ஈடு பட்ட நகராட்சி ஆணையர்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணையம் சம்மன்

இந்நிலையில் இந்த சம்ப வத்திற்கு நகராட்சி ஆணை யர் சிசில் தாமஸ் வருத்தம்  தெரிவித்து, வியாபாரி களுக்கு இழப்பீட்டையும் வழங்கிள்ளார். இருப்பினும், இச்சம்பவம் குறித்து வழக்கு  பதிந்துள் மாநில மனித உரிமை ஆணையம், விளக் கம் கேட்டு சிசில் தாமசுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.