tamilnadu

img

கொரோனா வைரஸ் தொற்று இனவெறி சுனாமியை கட்டவிழ்த்துவிட்டுள்ளது

அந்தோணியா குத்ரோஸ் வேதனை

ஜெனீவா, மே 9- கொரோனா வைரஸ் தொற்று வெறுப்பு மற்றும் இனவெறி சுனாமி யை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோ ணியா குத்ரோஸ் வேதனை தெரி வித்து உள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் அந்  தோணியா குத்ரோஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது;-

கொரோனா வைரஸ் தொற்று வெறுப்பு மற்றும் இனவெறி சுனாமி யை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது. அது மக்களை பலிகடா ஆக்கப்பார்ப் பதோடு பயமுறுத்துகிறது. வெளிநாட்டவர் எதிர்ப்பு உணர்வு ஆன்லைனிலும் தெருக்களிலும் அதி கரித்துள்ளது. யூத விரோத சதி கோட் பாடுகள் பரவியுள்ளன. கொரோனா வைப் பயன்படுத்தி முஸ்லிம் எதிர்ப்புத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக புலம்பெயர்ந்தோர், அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் வைரசின் ஆதாரமாக இழிவு படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க மறுக் கப்படுகிறது. வைரஸால் பாதிக்கப்படக்கூடிய வயதானவர்கள், “மிகவும் செலவு செய்யக்கூடியவர்கள் என்று வெறுக் கத்தக்க “மீம்ஸ்கள்” வெளிவந்துள்ளன.

உலகளவில் வெறுக்கத்தக்க பேச்சை முடிவுக்குக் கொண்டுவரு வதற்கான அனைத்து முயற்சிகளை யும் முறியடிக்க வேண்டுமென வேண் டுகோள் விடுத்தார்.  இனவெறி தவறானது மட்டுமல்ல. தீங்கு விளைவிக்கக் கூடியது. இது போன்ற விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென ஊடகங்க ளுக்கு அழைப்பு விடுத்தார். குறிப்பாக சமூக ஊடகங்கள் இனவெறி, தவ றான கருத்து, பிற தீங்கு விளைவிக் கும் உள்ளடக்கங்களை உடனடியாக அகற்ற வேண்டும். போலிச் செய்திகள்  ஆன்லைனில் பரவி வரும் நேரத்தில் டிஜிட்டல் கல்வியறிவில் கவனம் செலுத்த கல்வி நிறுவனங்களை கேட்டுக் கொண்டார்.