tamilnadu

img

கொரோனா அச்சம்... ராணிப்பேட்டையில் இளைஞர் தற்கொலை....   

கலவை 
தமிழகத்தின் புதிய மாவட்டமான ராணிப்பேட்டையின் கலவை பகுதியில் சேர்ந்தவர் சதீஷ் குமார் (26). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த 10 தினங்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. 

தொடர் வயிற்று வலியால் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என அஞ்சி தனது அறையில் சதீஷ் தற்கொலை (தூக்கு கயிறு) செய்து கொண்டார். இதனை கண்ட பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ் குமார் ஏற்கெனவே  இறந்து விட்டதாக  கூறினார். கொரோனாபரிசோதனையில் சதீஷிற்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. தற்போது கலவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.   

;