சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு
சென்னை, டிச.15- சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டு பிரச்சாரக் கொடியேற்றும் நிகழ்வு ஞாயிறன்று (டிச.15) தமிழ கம் முழுவதும் நடைபெற்றது. சிஐடியு 4வது அகில இந்திய மாநாடு 1979லும், 11வது மாநாடு 2003லும் சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 16 ஆண்டு களுக்கு பிறகு 16வது மாநாடு 2020 ஜன வரி 23-27 ஆகிய தேதிகளில் சென்னை யில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கான வரவேற்புக் குழு கூட்டம் கடந்த ஜூலை 4 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் 1000 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. இதன்தொடர்ச்சி யாக பல்வேறு உபக்குழுக்கள் அமைக் கப்பட்டு மாநாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
சிஐடியு ஸ்தாபக பொதுச் செயலா ளர் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தின மான டிச.15 அன்று மாநாட்டுக் கொடி யேற்றும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ கம் முழுவதும் சிஐடியு அலுவல கங்கள், உறுப்பினர்களின் வீடுகள், தொழிற்சாலை வாயில்கள், பணியிடங் கள் போன்ற இடங்களில் அகில இந் திய மாநாட்டுக் கொடியேற்றப்பட்டது. மாநாட்டை குறிக்கும் வகையில் 16 கொடிகளை ஏற்றினர். சென்னையில் உள்ள சிஐடியு மாநி லக்குழு அலுவலகமான ஏ.நல்லசிவன் நினைவகத்தில் மாநில பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன் கொடியேற்றி னார். அங்கு வைக்கப்பட்டிருந்த தோழர் பி.ராமமூர்த்தி உருவப்படத் திற்கு மலரஞ்சலி செலுத்தி உரை யாற்றினார். நிகழ்வில் மாநில நிர்வாகி கள் எஸ்.எஸ்.சுப்பிரமணியம், ஏ. கிருஷ்ணமூர்த்தி, கே.சி.கோபிகுமார், எம்.எஸ்.ராஜேந்திரன், எம்.வி.எஸ்.மணியன், கோபால், எம்.பழனி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.