tamilnadu

img

அனைத்துக் கட்சிகள், எம்பிக்களுடன் ஆலோசனை நடத்துக!

கொரோனா பரவல் தமிழகத்தில் தீவிரம்

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 14- கொரோனா தொற்று, மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து அதிக பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் இந்த நெருக்கடியை எப்படி திறம்பட எதிர்கொள்வது என்பது குறித்து தமிழக அரசு அனைத்துக் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயல்பட முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவிட் 19 தொற்று பரவல் ஏற்படுத்தி யுள்ள பொருளாதார தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யவும் அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் தமிழக அரசு, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்க ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் பரிசீலனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விரிவான ஆலோச னைகளை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள முதன்மை அம்சங்கள் வருமாறு: கொரோனா நோய்த்தொற்று, மர ணங்கள் எண்ணிக்கையில்  தமிழகம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள் ளது. 6 முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னரும் நோய்த்தொற்றை கட்டுப் படுத்துவதில் வெற்றி பெறஇயலவில்லை. 

இதனை எதிர்கொள்ள  பல்வேறு ஆலோசனைகளை குறிப்பாக, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களை கையகப்படுத்தி அங்கு கோவிட் சிகிச்சை அளிக்க வேண்டும்; தனியார் மருத்துவமனைகளில் 25 சதமான இடங்கள் ஏழைகளுக்கு வழங்குவதை சிங்கிள் விண்டோ ஏற்பாட்டின் மூலமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்; நியாய மான மருத்துவ கட்டணங்கள் நிர்ணயிக்கப்  பட வேண்டும்; பரிசோதனை  செய்வதை அதிகரிக்க வேண்டும்; தனியார் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை கூடங்களில் பரிசோதனைக் கானகட்ட ணத்தை  ஆயிரம் ரூபாயாக குறைத்து அதையும் மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் இணைத்துவிட வேண்டும்; கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில்  ஈடுபடும் முன்வரிசை களப்பணி யாளர்களை பாது காப்பதற்கான உறுதியான நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும்; இவர்கள் தொற்றினால் மரணமடைந்தால்  50லட்சம் ரூபாய் இழப்பீடு, அரசு வேலை  அளிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

தமிழக அரசின் நிதிநிலைமை கோவிட் 19க்கு முன்னரே மிகுந்த நெருக்கடியில் இருந்தது. மத்திய  அரசின் பங்களிப்பும் திருப்திகரமாக இல்லை. 2019-20ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த வருவாய் பற்றா க்குறை ரூ. 14,314.76 கோடியிலிருந்து திருத்த மதிப்பீடுகளின் படி ரூ. 25,071.63 கோடியாக, ஏறக்குறைய 80 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இந்த பின்னணியில் 2020-21ம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்ட மதிப்பீட்டுக்கும் நடைமுறை க்கும் மிகப்பெரும்  இடைவெளியே ஏற்படும். கடன் சுமை உயரும். எனவே தமிழக பொருளாதார நிலை மை கவலைக்கிடமாகவே தொடரும் அபாயம்உள்ளது.

வேலையின்மையும், வன்முறையும்

இவ்வருடம் ஏப்ரல் இறுதியில் வேலையின்மை விகிதாச்சாரத்தில் 50 சதவிகிதத்தோடு தமிழகமே முதலிடத்தில் நிற்கிறது. மே இறுதியில் இது 33 சதவீதமாக குறைந்தாலும் தேசிய சராசரியை விட  அதிகம் என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் கூறுகிறது. பெண்கள், குழந்தைகள், தலித் மக்கள், பழங்குடி இனத்தவர் சந்திக்கும் பிரச்சனை களும், அவர்கள் மீதான வன்முறையும்  அதிகரித்து வருகின்றன.  வேலையிழந்து, வருமானமிழந்து, வாழ்வை இழந்து வாடும் தமிழக மக்களுடைய தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு  போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. தேவையான நிதியை மத்திய அரசிடம் வாதாடிப் பெறுவதற்கு கூடுதல் அழுத்தம் தேவைப்படுகிறது. இன்றைய நெருக்கடியை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சிகள், நிபுணர்களின் ஆலோசனையை பெற தமிழக அரசு முன்வர வேண்டும். 

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயம், வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதற்கும், சிறு-குறு நடுத்தர தொழில்களை பாது காப்பதற்கும் கூடுதலான நிதி மற்றும் திட்ட மிடல் வேண்டுமென்பதை கோவிட் 19-ன் படிப்பினை யாக எடுத்துக் கொள்ள வேண்டும்.