சென்னை,பிப்.12- தமிழக அரசுக்கும், சியட் நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டில் ரூ. 4 ஆயிரம் கோடியில் புதிய டயர் உற்பத்தி தொழிற் சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே கண்ணன் தாங்கலில் அமைக்கப்பட்ட ஆலையை சியட் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ஆனந்த் கோயங்கா முன் னிலையில் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதையடுத்து பேசிய முதலமைச்சர், வாகன உற்பத்தியை போல டயர் உற்பத்தியிலும் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றும், நாட்டின் மொத்த டயர் உற்பத்தியில் 40 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை யிலும் ஏராளமான டயர் உற்பத்தி ஆலைகள் இயங்குவதாக வும், அந்த ஆலைகளில் இரு சக்கர வாகன டயர் முதல் போர் விமான டயர் வரை உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் முதலீட்டு திட்டங்களை ஆய்வு செய்து உத்த ரவு வழங்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகளை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளை தமி ழக அரசு உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்த முதலமைச் சர், சியட் நிறுவனம் தனது ஆராய்ச்சி துறையையும் சென்னை யில் துவங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் சக்தி உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், சமூக மேம்பாடு, பொரு ளாதார வளர்ச்சி என அனைத்திலும் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றிற்கு 30 ஆயிரம் டயர்கள் உற்பத்தி செய்யப்படுவதும்,40 சதவீதம் பெண்கள் இங்கு பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. புதிய தொழிற் சாலை திறக்கப்படுவது மூலம் ஆயிரம் பேர் நேரடியாக வும்,10 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர்.