tamilnadu

img

பொதுவுடமைப் போராளி, சுதந்திரப் போராட்ட வீரர்

சென்னை, ஜூலை 15 - விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை  உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா தனது 98வது பிறந்தநாளை  திங்களன்று (ஜூலை 15) வழக்கம்போல் எளிமையாக  கொண்டாடினார். குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கட்சித் தலைவர்கள், உறவினர்கள்,  நண்பர்கள் நேரில் வருகைதந்து சங்கரய்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு சிறப்பு அழைப்பாளர் கே.வரதராசன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், எஸ்.நூர்முகமது, ஏ.லாசர், என்.குணசேகரன், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, டி. ரவீந்திரன், க.பீம்ராவ், சி.கல்யாணசுந்தரம், ஏ. ஆறுமுக நயினார், க.உதயகுமார், எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் (தென்சென்னை), இ.சங்கர் (காஞ்சிபுரம்), பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் தெ.லட்சுமணன், எஸ்.நம்புராஜன், டிசம்பர் 3 இயக்கத் தலைவர் தீபக், பத்திரிகையாளர் அ.குமரேசன், குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் எஸ்.சந்தானம் உள்ளிட்டு பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என்.சங்கரய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

வைகோ வாழ்த்து

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், டி.கே.ரங்கராஜன் எம்.பி உள்பட பலர் சங்கரய்யாவுக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தனர்.