சென்னை, ஏப்.28- தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலொ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் எந்த தளர்வும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதனால் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கூட்டமாக வெளியே வருவதை தடுக்கும் வகையில், ரேஷன் பொருட்களை வாங்க ஏதுவாக மே 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் எனவும் மே 4 ஆம் தேதியில் இருந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலொ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.