உத்தரபிரதேச மாநிலத்தில் கார் ஒன்றில் சிக்கிய 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஒரு குடும்பத்தினர் ஞாயிறன்று பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கினர். திங்கள் மதியம் காரைத் திறந்து 4 குழந்தைகள் காருக்குள் சென்றன. ஆனால் எதிர்பாரத விதமாக கார் மூடியதால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதையத்து குழந்தைகள் மூச்சு விட முடியாமல் திணறினர். விளையாடப் போன குழந்தைகள் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர். அப்போதுதான் குழந்தைகள் காருக்குள் சிக்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. இதில் சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
துகுறித்து மொராதாபாத் எஸ்.பி. அமித் குமார் ஆனந்த் கூறும்போது, ”காருக்குள் 4 குழந்தைகளுமே மயக்கமடைந்து விட்டன. அவர்கள் 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர்” என்றார்.