tamilnadu

img

நீதிபதியாகும் 21 வயது வாலிபர்

ஜெய்ப்பூர்,நவ.22-  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் நாட்டி லேயே மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்கிறார். ராஜஸ்தான் மாநிலம் மான சரோவர் பகுதியைச் சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங். 21 வயதான இவர், தனது ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை ராஜஸ்தான் பல் கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முடித்தார்.பின்னர் நீதிபதிகளுக்கான தகுதி தேர்வி லும் மயங்க் பிரதாப் தேர்ச்சி பெற்றார். இந்தியாவிலேயே மிக இள வயதில் நீதிபதியானவர்  எனும் சிறப்பை பெறவுள்ளார். நீதிபதி ஆவதற்கு குறைந்தபட்ச வரம்பாக  இருந்த 23 வயதை 21 வயதாக ராஜஸ்தான் நீதி மன்றம் இந்த ஆண்டு குறைத்தது.

;