tamilnadu

img

அரசாணை ரத்து கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

உள்ளாட்சி மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்பு

மதுரை, நவ. 21- மேயர், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்ற தமிழக அரசின் அறி விப்பாணையை ரத்து செய்ய கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நீல மேகம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்  செய்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் - தாரணி அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் கூறுகை யில், மேயர், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்வு என்பது பெரும் குளறுபடிகளை ஏற்படுத்தும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் சரியான முறையில் செயல்பட  முடியும். எனவே அரசின் அறிவிப் பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகளிடம் முறையிட்டார். அதற்கு நீதிபதிகள் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என்றனர். எனவே இந்த முறையீடு விரைவில் மனுவாக தாக்கல் செய்யப்பட உள்ளது.